வடக்கு, கிழக்கிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டி!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள குறுகிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன.

அந்த அழைப்புக்களை பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் தேசிய நேசக் கட் சிகளு டன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர் தல் நெருங்கும் போது கூட்டணி சம்பந்த மான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்போம்.

நாம் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் போது தமிழ் முற்போக்கு கூட்டணியாக மாத்திரமே போட்டியிடுவோம். ஐக்கிய மக்கள் சக்தியாக ஒருபோதும் வடக்கு, கிழக் கில் போட்டியிட மாட்டோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் எங்களைப் பிரதி
நிதித்துவப்படுத்தி ரெலிபோன் சின்னம்
வராது. – என்றார்.

மேலும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து போட்டியிடுவீர்களா என மனோகணேசனிடம் வினவியபோது – தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எங்களுடைய நேசக் கட்சிதான். அது போல் பலநேசக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. அவர்களோடு கலந்தாலோ
சித்து பயணிப்போம். – என்றார் அவர்.

Related Articles

Latest Articles