ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை நியமித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










