வனிதாவுக்கு பாடி டிமாண்டு அதிகம்: சீனியர் நடிகர் பேச்சால் சர்ச்சை

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் கூறினார். மேலும் தனக்கு தன் புருஷன் வேண்டும் என்றும் கூறினார். ஹெலன் புகார் கொடுத்த பிறகு வனிதா விஜயகுமாரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் வனிதா என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலை துவங்க டெக்னிக்கல் உதவி தேவைப்பட்டபோது பீட்டர் பால் உதவினார் என்றார் வனிதா. பீட்டர் பாலின் படத்தில் நடிக்க கதை கேட்க சென்ற இடத்தில் காதல் ஏற்பட்டு திருமணம் வரை வந்ததாக வனிதா கூறினார்.

ஹெலன் புகார் தெரிவித்த பிறகு ஜூன் 27ம் தேதி நடந்தது திருமணம் என்றும் வைத்துக் கொள்ளலாம், நிச்சயதார்த்தம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். லாக்டவுன் முடிந்த பிறகு முறைப்படி திருமணத்தை பதிவு செய்வோம். அந்த நிஜ திருமணத்திற்கு பூட்டு, சாவி அடங்கிய மோதிரங்களை பயன்படுத்துவோம் என்று வனிதா தெரிவித்தார்.

வனிதாவின் திருமணத்தை பற்றி தான் இதுவரை சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் மூத்த நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வனிதா பற்றி விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

வனிதாவை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரின் முதல் கணவர் ஆகாஷ் ரொம்ப நல்லவர். வனிதா பிரச்சனையால் அவர் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். வனிதாவுக்கு பாடி டிமாண்ட் அதிகமாக இருக்கலாம். பாடி டிமாண்ட் என்றால் என்ன என்பதை அகராதியில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படம் தயாரிக்க ஆசைப்பட்ட வனிதா ராபர்ட் மாஸ்டருடன் உறவில் இருந்தார். அதன் பிறகு தெலுங்காரர் ஒருவரை திருமணம் செய்தார். யூடியூப் சேனல் துவங்க பீட்டர் பாலுடன் சேர்ந்தார். தேவைப்படம் போது யாரை வேண்டுமானாலும் நண்பராக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் வனிதாவோ அவ்வப்போது திருமணம் செய்து கொள்கிறார் என்றார்.

வனிதா உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பீட்டர் பாலுக்கும், எலிசபெத் ஹெலனுக்கும் விவாகரத்து நடக்காததால் வனிதாவை வேறு பெயர் வைத்து கிண்டல் செய்கிறார்கள்.

ட்விட்டரில் இருந்து வெளியேறிய வனிதா: (அ)சிங்கப்பெண் எங்கே ஓடிட்டாங்கனு கலாய்க்கும் கஸ்தூரி

ட்விட்டரில் வனிதா, பீட்டர் பால் திருமணம் குறித்த விவாதமாகத் தான் இருக்கிறது. நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் வனிதாவை விமர்சித்தார்கள். தன்னை விமர்சித்த அனைவரையும் திட்டிய வனிதா நேற்று முன்தினம் மாலை ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அங்கு தன் வாழ்க்கை தொடர்பாக போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles