வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் பலி: கலஹா பொலிஸ் பிரிவில் சோகம்

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுக்கலை பகுதியில் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 39 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

கலஹா – கண்டி பிரதான வீதியில் குறித்த நபரை மோதிவிட்டு வாகனம் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த நபர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.

அருகில் உள்ள மக்கள் சத்தத்தை கேட்டு அங்கு சென்று காயமடைந்திருந்த 39 வயது நபரை , 1990 ஆம்புலன்ஸ் வண்டியை வரவலைத்து கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles