” அரசியலில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. மக்கள் அழைத்தால் மாகாண சபைக்கு வருவேன். இல்லையேல் வைத்தியராக எனது பணி தொடரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாளைய (இன்று) தினத்துடன் எனது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகலாம். எனினும், தங்கை கௌசல்யா இருக்கின்றார். நான் வெளிநாடுகளுக்கு ஓடப்போவதில்லை. நாட்டில் இருந்தே சவால்களை எதிர்கொள்வேன்.”- எனவும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் காணொளியொன்றை வெளியிட்டே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.










