விபத்தில் தாயும், மகனும் பலி – தந்தை படுகாயம்!

டிப்பர் ரக வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும், அவரது 18 வயது மகனும் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஓட்டோவைச் செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் படுகாயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles