திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு திடீரன் துண்டிக்கப்பட்டது. இதன்பின்னர் விமானம் விபத்துக்குள்ளானமை கண்டறியப்பட்டது.
இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










