இடதுசாரி கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட தரப்பினர் இணைந்தே இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்தே இக்கூட்டணிக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இடதுசாரி கூட்டணியாக மே தினத்தை நடத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் நபரொருவரை ஆதரிப்பதா அல்லது தமது அணியில் ஒருவரை களமிறக்குவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.