தம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக மழை காரணமாக குறித்த பேருந்து வீதியைவிட்டு வழுக்கிச்சென்று வயல் நிலத்துக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கதுருவெல – குருணாகல் வீதியில் சேவையில் ஈடுபட்டுவந்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்