வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண்,  மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ நிலை வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் நாளை (23) பிற்பகல் 2.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

Related Articles

Latest Articles