“வெளிநாட்டு பயணமும் இல்லை, சலுகையும் இல்லை- கவலையில் திலகர்” – திகா தகவல்

” சுக போகங்களும் வெளிநாட்டு பயணங்களும் இல்லாமல் போனதையடுத்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் திலகரை நினைத்து கவலைப்படுகிறேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தொழிலாளர் தேசிய முன்னணி கலைக்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறாரே? இது குறித்து உங்க பதில் என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” தொழிலாளர் தேசிய முன்னணியை ஒருவரால் மட்டுமே கலைக்க முடியும் என்றால் எதற்கு நிர்வாக சபை ? திலகர் வாயில் சனி பிடிச்சிருக்கு அவருக்கு எதிரியே அவர்தான்.

பாவம் அவரை நினைத்து அழுவதா? சிரிப்பதா ? சமூக வலைத்தளங்களில் அவர் எழுதும் பதிவுகள் ஊடாக அவருக்கே ஆவர் ஆப்பு வைத்து கொள்கிறார்.

அவர் விமர்சனங்களை விட்டு மௌனமாக இருந்து இருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எம்மோடு இணைந்து போட்டியிட்டுருக்க முடியும்.

என்ன செய்ய அவரது வாயே அவருக்கு எதிரியாகிவிட்டது. அதைவிட அவர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தோட்ட மக்களை நேரடியாக சென்று பார்த்ததை விட வெளிநாடுகளுக்கு சென்று பேஸ்புக்கில் படங்கள் போட்டதே அதிகம்.

அதுமாத்திரமா பாரளுமன்ற சலுகைகள் ராஜதந்திர கடவுசீட்டு எல்லாமே அவரிடம் அன்று இருந்தது இன்று எதுவும் இல்லை. சுகம் அனுபவித்த அவருக்கு இப்போது ஒன்றுமே இல்லாததன் காரணமாக எதை எதையோ சொல்கிறார்.

நான் அவரை குறித்து கவலைப்படுகிறேன். என்னசெய்ய அவர் புதிய கட்சி தொடங்கட்டும் அது அலரது தனிப்பட்ட விருப்பம் .” – என்றார்.

நன்றி – அண்ணாச்சி இணையம்

Related Articles

Latest Articles