வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.
சௌமியபவனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்றதுடன் இதில் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டது.
வேலை நாட்கள் குறைக்கப்படும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு நடக்காது. நடக்கவும் விடமாட்டோம். கம்பனிகள் வேலை நாட்களை குறைத்தால் விளைவுகள் பாரதூரமாக அமையும். பதிலடி கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது. ” – என்றார்.










