ஹட்டனில் நடு வீதியில் குடை சாய்ந்தது உழவு இயந்திர பெட்டி – 9 புகையிரத ஊழியர்கள் காயம்

புகையிரத ஊழியர்கள் பயணித்த உழவு இயந்திரத்தின் பெட்டி நடு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தி பகுதியில் இன்று 18 திகதி பிற்பகல் 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பகுதியில் புகையிரத பணிக்காக உழவு இயந்திரத்தில் அழைத்துவரப்பட்ட குறித்த ஊழியர்கள் வேலை முடிந்து மீண்டும் நாவலப்பிட்டிய நோக்கி பயணித்து கொண்டிருந்த போது உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று வீதியில் குடை சாய்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles