பதுளை, ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் கார்ப்பட் செய்வதற்கான புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதியை கார்ப்பட் செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த வீதியின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 540 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை அமைச்சர்களான நிமல் லாங்சா, நிமல்சிறிபால டி சில்வா, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர சாமர, டிலான் பெரேரா, தெனிப்பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.