ஹிஸ்புல்லா அமைப்புமீதும் இஸ்ரேல் போர் தொடுப்பு

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதில். ஹமாஸ் பிடியில் இருந்த பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் 100க்கும் மேற்பட்டோர் காசாவில் ஹமாஸ் பிடியில் பணய கைதிகளாக உள்ளனர்.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவுடன் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

லெபனானில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு செயல்பட்டு வரும் நிலையில் நாட்டின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அங்கிருந்து இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அவ்வப்போது டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் கோலான் ஹைட்ஸ் நகரில் மஜ்தல் ஷம்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் 12 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த அனைவரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். ஹிஸ்புல்லா தாக்குதலில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் 12 பேர் உயிரிழந்த சம்பவம் இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை கொடுக்காத விலையை ஹிஸ்புல்லா கொடுக்கும்’ என்றார்.

அதேபோல், இஸ்ரேல் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லா அனைத்து சிவப்பு கோடுகளையும் தாண்டிவிட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தற்போது தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. ஏற்கனவே காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இறங்கியுள்ள இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு எதிராவும் போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தலாம். மேலும், ஈரானும் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த கிளர்ச்சிக்குழுக்களுக்கு அதிக ஆயுதங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் மத்திய கிழக்கில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles