ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் அதிகாரிகளுக்கு முன்னோடி NVQ மற்றும் Skills Passport நிகழ்ச்சிகளை வழங்குகிறது

இலங்கையின் முதலாவது தேசிய திறன் கடவுச்சீட்டு (NSP) மற்றும் தேசிய தொழில்சார் தகைமை (NVQ) ஆகியவற்றை கள உத்தியோகத்தர்களுக்கு வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் Hayleys பெருந்தோட்ட நிறுவனமானது மனித வள மேம்பாட்டிற்கான புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

நிலையான பெருந்தோட்ட வியாபார செயற்பாடுகள் தொடர்பான அவர்களது திறமைகளை மேம்படுத்தும் வகையில், Kelani Valley Plantations PLC (KVPL), Talawakelle Tea Estates PLC (TTEL) மற்றும் Horana Plantations PLC (HPL) ஆகியவற்றின் 70 கள அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட, Hayleys Plantations முகாமைத்துவப் பணிப்பாளர், கலாநிதி Roshan Rajadurai கருத்து தெரிவிக்கையில், “Hayleys Plantationsஇல் எங்களது பணியானது, தோட்ட நிர்வாகத்தில் ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்துவதாகும், அனுபவ அடிப்படையிலான அறிவை மேம்பட்ட தொழில்நுட்ப அறிவுடன் இணைப்பதாகும்.

“NVQ மற்றும் Skills Passport அறிமுகத்துடன், துடிப்பான, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக, எங்கள் குழுவின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் உயர்த்துவதற்கு நாங்கள் உதவுகிறோம். இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவு செய்ததற்காக குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்கள் நாட்டின் முன்னணி தோட்டத்துறை அதிகாரிகளாக வளர்ச்சியடைவதையும், அவர்களின் தொழில்சார் வளர்ச்சியைத் தொடர்வதையும், களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் எதிர்பார்க்கிறேன்.” என தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்கள் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (EFC), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) – கொழும்பு அலுவலகம், தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி ஆணையம் (NAITA) மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) ஆகியவற்றுக்கு இடையேயான நான்கு தரப்பு முன்முயற்சியாகும். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணையம் (NAITA) வழங்கும் தொழில்நுட்ப ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு வருட அனுபவம் மற்றும் பாராட்டத்தக்க செயல்திறன் பதிவுகளுடன் Hayleys பெருந்தோட்டத்திலுள்ள களப் பணியாளர்கள் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அம்சங்களில் NAITAஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியை முடித்தவுடன், கள அலுவலர்களின் முதல் தொகுதி NVQ சான்றிதழ்கள் மற்றும் QR குறியீட்டைக் கொண்ட டிஜிட்டல் திறன்கள் பாஸ்போர்ட் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது, இது அவர்களின் திறன்கள் கோப்புறைக்கு (Portfolio) வசதியான ஒன்லைன் அணுகலை எளிதாக்குகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles