” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என உறுதியாக கூறுகின்றேன்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியொன்றைபெற்று ஓய்வுகாலத்தை கழிக்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவார் எனவும் விமல் குறிப்பிட்டார்.
” கோட்டாபய ராஜபக்ச என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். அப்போது கோட்டா ஆட்சியின் இறுதி காலம் ஆரம்பமானது. ரணில் விக்கிரமசிங்க, ரொஷான் ரணசிங்கவை நீக்கியுள்ளார். ஆக இந்த அரசின் இறுதி பயணமும் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.” – எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.










