அடுத்த மாதம் சஜித் டில்லி பயணம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நான்கு நாள் விஜயமாக நவம்பர் முதல் வாரத்தில் புதுடில்லி செல்கின்றார்.

தம்மோடு வேறு பிரதிநிதிகள் குழுவைக் கூட்டிச் செல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் தனித்து புதுடில்லி செல்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அங்கு இந்திய உயர்மட்டத் தலைவர்களோடு அவர் பல சுற்றுப் பேச்சுகளில் ஈடுபடுவார் என்றும் தெரிகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைப் புதுடில்லிக்கு அழைத்துப் பேசிய இந்திய அரசு, இப்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு அழைத்திருப்பது முக்கிய விடயமாகப் பேசப்படுகின்றது.

Related Articles

Latest Articles