அடுத்த வருடம் தேர்தல் உறுதி!

மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஜீவன் தொண்டமான் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” எல்லை நிர்ணய விவகாரத்தை கையாளும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது. அப்பணி முடிந்ததும் தேர்தல் பற்றி தீர்மானிக்கப்படும். பழைய முறைமையா அல்லது புதியை முறைமையா என்பது பற்றி சிறந்த கலந்துரையாடலை நடத்தி முடிவொன்றை எடுக்கலாம். தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles