அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து தர பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
கொவிட்-19 அச்சுறுத்தலால் தற்சமயம் ஆரம்பப் பிரிவு மற்றும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
