அடை மழை: பெருந்தோட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்!

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா உட்பட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் அடை மழை பெய்துவருகின்றது.

இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் , விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழையுடன் எங்கு பார்த்தாலும் பனி மூட்டமும் நிலவுகின்றது. எனவே, சாரதிகள் அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் புசல்லாவை, கம்பளை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்துவருகின்றது.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles