அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 11ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் முதலாவது கொடி, முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
டயகம , சந்திரகாமம் பிரிவின் தோட்டகமிட்டி தலைவர் தியாகு உட்பட ஆரம்ப ஆதரவாளர்களாலும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் இளைஞர் அணி அமைப்பாளர்களாான வீரமலை குணசேகரன் மற்றும் ராமஜெயம் பிரசாத் ஆகியோர்களால் பூஜை வழிபாடுகளின் பின்னர் சுப நேரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.










