அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினை – கல்வி அமைச்சின் செயலருக்கு அவசர கடிதம்!

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறுகோரி கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தால் அனுப்பட்டுள்ள கடிதம் வருமாறு,

” நீண்ட காலமாக சேவை செய்யும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கீழே குறிப்பிடப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக கலந்துரையாடித் தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக கல்வி அமைச்சின் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் எமது சங்கத்திற்கு உடனடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றுத் தாருங்கள் என மிகவும் தேவைப்பாட்டோடு கேட்டுக்கொள்கிறோம்.

1. 23 வருடங்களாகப் பேசு பொருளாக உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மையான சம்பளப் பிரச்சினை தொடர்பாக சம்பள ஆணைக்குழுவின் தீர்மானத்தினை செயல்படுத்த விடாமல் தடுத்தல்.

2. ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் படிவங்கள் நிரப்பும் செயற்பாடுகள், கட்டாய செயற்றிட்டங்கள் உட்பட மேலதிக வேலைகளை வழங்குதல்.

3. சேவை புரிகின்ற பழைய மற்றும் புதிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உள்ளகரீதியாகவும் பதவி உயர்வு வழங்கும் போதும் எழுகின்ற பிரச்சினைகள்.

4. இலங்கை ஆசிரியர் சேவையில் மொடியுல்கள் செயற்படுத்தும் போது எழுகின்ற பிரச்சினைகள்.

5. ஆசிரியர்களின் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பான படிவம் மற்றும் சம்பள திட்டப்படிவம் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள்.

6. தேசியப் பாடசாலை,மாகாண பாடசாலை தொடர்பான தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதனை நிறைவு செய்து மீண்டும் இடமாற்றம் பெறும் போது எழுகின்ற பிரச்சினைகள்.

7. வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள்.

8.ஓய்வு பெறுவதற்குள்ள ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

9. ஆசிரியர்களின் பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள்.

10. சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழினப் பிள்ளைகளுக்கு தங்கள் மொழியில் கா.பொ.த.உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை மேம்படுத்திக்கொள்ள பாடசாலைகள் இல்லாமை மற்றும் அந்த வழங்கள் உள்ள பாடசாலைக்குச் செல்ல வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கபடாமை.

11. பாடசாலையின் முதன்மையான மற்றும் பரிபாலனச் செயற்பாடுகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடம் வழங்குதல்,பாடசாலையை நடாத்திச் செல்ல பெற்றோர்களிடம் பணம் அறவிடுதல்.

12. ஏனையவை

போன்ற விடயங்கள் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles