அநுர பாஸ்: என்.பி.பி. எம்.பிக்கள் பெயில்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாஸ்: தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெயில் என்றுதான் கூற வேண்டும். ஜனாதிபதிமீதுதான் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனையோர்மீது அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், நுகேகொடை கூட்டமென்பது நாமலை ஜனாதிபதியாக்குவதற்கான நடவடிக்கை அல்ல எனவும், ஜனநாயகத்துக்கானது எனவும் அவர் கூறினார்.

“ நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களை கூட்டத்தில் பங்கேற்க வைப்பார்கள்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles