அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு

அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

நடிகை அனுஷ்கா, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் அனுஷ்கா.

பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக புராண கதையில் நடிக்க அனுஷ்கா திட்டமிட்டுள்ளாராம். சகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்த படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமான குணசேகர் இயக்குகிறார்.

விசுவாமித்ர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலா, துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் துருவாச முனிவர் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற்று சகுந்தலை காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு துஷ்யந்தனுடன் எப்படி இணைகிறார் என்பதே கதை.

இதில் சகுந்தலை வேடத்தில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். ஏற்கனவே சகுந்தலை வாழ்க்கையை மையமாக வைத்து சில புராண படங்கள் வந்துள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940-ல் சகுந்தலை படம் வெளிவந்துள்ளது. 1961-ல் அசாம் மொழியிலும் 1965-ல் மலையாளத்திலும் சகுந்தலை கதை படமாகி வெளியானது.

Related Articles

Latest Articles