அமரர் சந்திரசேகரனின் 11 ஆவது சிரார்த்த தினம் இன்று

மலையகத்தில் உரிமை அரசியலுக்கு உயிர்கொடுத்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். பெரியசாமி சந்திரசேகரனின் 11 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு அமரர் சந்திரசேகரனின் புதல்வியும், சட்டத்தரணியும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” பாடசாலை மாணவனாக இருந்தும் தனது 20 வயதிலேயே மலையக மக்களின் விடிவுக்கான போராட்ட அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டு தான் பிறந்து வளர்ந்து நேசித்த தலவாக்கலை மண்ணிலேயே விதையாகவும் விழுந்த என் அன்பு தந்தை அமரர் பெ.சந்திரசேகரனின் 11வது சிரார்த்த தினம் இன்றாகும்.

 அமரர் பெ.சந்திரசேகரன் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். அவர் மண்ணுலகை விட்டு பிரிந்த போது நான் சிறுமியாக இருந்தேன்.

11 வருடங்கள் 11 நிமிடங்களாய் கடந்து விட்டாலும் கூட என்  தந்தையின் பாச நினைவுகளோடு அவர் விட்டுச் சென்ற மக்கள் சேவையில் அவரது அடியொற்றி நடக்கிறேன்.நான் சந்திக்கும் அனைத்து மக்களும் இன்று வரை என் தந்தையின் நினைவுகளோடு வாழ்ந்து வருவது எனக்கு புதிய சக்தியை தருகிறது.

அவரது இழப்பை எண்ணி பலர் கண் கலங்குவது என் தந்தையின் பாசத்தை மீட்டு காட்டுகிறது. அவர் விட்டுச்சென்ற சேவை தொடர்ந்து முன்னெடுக்கத் துடிக்கும் இளைஞர்களின் ஆர்வம் எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கிறது.

என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியவர்களின் அனுபவங்கள் நான் பயணிக்க வேண்டிய பாதையை வடிவமைத்து கொடுக்கிறது.

மக்களின் உயர்ச்சியை முதன்மைப்படுத்திய என் தந்தையின் சேவைகள் மலையக மண்ணில் வேர் பதித்து கிளைகள் பரப்பி பரந்து விரிந்து கிடப்பதை மன நெகிழ்ச்சியுடன் அவதானிக்கிறேன்.

நல்லது நடக்கும் என அமைதி காப்பது அடிமைத்தனம் செய்து முடிப்பேன் தீமைகள் அழிப்பேன் என்பது வீரத்தனம்.

சித்திரை புத்தாண்டில் பிறந்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் எம்மை விட்டு பிரிந்த நம் தலைவன் எம் அனைவருக்கும் பதிய வாழ்க்கையை தந்து விட்டே சென்றுள்ளார். அர்த்தமுள்ள கொள்கைகளை தந்து விட்டு சென்றுள்ளார்.
நம்பிக்கை என்ற விதையை மலையகமெங்கும் விதைத்து விட்டுச்சென்றுள்ளார்.

இதனை காப்பாற்றி வளர்த்தெடுத்து எம் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் வரை என் சமூகப் பணிகளிலிருந்து நான் ஓய்வெடுக்க மாட்டேன்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles