‘அமைச்சு பதவியை துறக்கவில்லை’ – அலிசப்ரி விளக்கம்

தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்யவுள்ளார் எனவும், இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவியபோதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

Latest Articles