” அமைச்சு பதவி கேட்டு அலைபவன் அல்லன் நான்”

” நான் அமைச்சு பதவி கேட்டு அலையவில்லை. ஜனாதிபதி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதனை பொறுப்பேற்க தயார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன், தனக்கு இன்னும் அமைச்சு பதவி கிடைக்காமை தொடர்பில் கவலை அடையவில்லை எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, தானும் அமைச்சு பதவி கோரப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles