இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் மட்டகளப்பை சேர்ந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ,
” நாட்டில் தற்போது எவ்வித இன வேறுபாடுமின்றி மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.அண்ணன் தம்பிகளாக, நல்ல உறவினர்களாக நாட்டில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்,பொருளாதர பின்னடைவில் இருந்து நாட்டை பழைய நிலைக்கு மீட்க இன,மதம் பாராமல் போராடி கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இனத்துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் அம்பிட்டிய சுமரரத்ன தேரரின் பேச்சுகளும் செற்பாடுகளும் காணப்படுகின்றன.எனவே இவ்வாறானவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தானவர்கள் எனவே அவரை அரசாங்கத்தினதும் ,ஜனாதிபதியினதும் உத்தரவோடு கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.
நீலமேகம் பிரசாந்த்
