” மக்கள் பக்கம்நின்று கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவை, பதவி நீக்கம் செய்தமையானது அரசின் வீழ்ச்சிப் பயணத்தின் ஆரம்பமாகும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் புஸ்ஸல்லாவ பிரதேச தோட்ட தலைவர்களுக்கான சந்திப்பு , புஸல்லாவையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட ராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு,
” முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமசந்திர இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டதரணியுமாவார். இலங்கையில் பல அமைச்சு பதவிகளையும், அரசியல் கூட்டணி கட்சிகளின் செயலாளராகவும் இருந்துள்ளார். நல்ல அரசியல் அனுவபம் உள்ளவர். நாட்டுக்காக பல உன்னத சேவைகளை செய்யதவர். இவரை பதவியில் இருந்து விழக்கியது ஒரு கோழைத்தனமான செயற்பாடாகும். இந்த செயற்பாடு தற்போதை அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை சுட்டிக்காட்டுகின்றது.
இந்த அரசாங்கத்தில் இருக்ககும் அமைச்சர்களான வாசுதேவ நாணயகார விமல் வீரவன்ச உதய கம்பன்வில, நிமல் லன்சா போன்றவர்களும் அண்மை காலமாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உண்மையை பேசிய முன்னாள் அமைச்சர் சுசிலை பதவியில் இருந்து விலக்கியுள்ளனனர். இப்படியான அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.










