ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அரசியலுக்கு விடைகொடுக்க உத்தேசித்துள்ளார்.
16 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவரும் சுஜீவ, கடைசியாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக பதவி வகித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். இந்நிலையிலேயே அவர் அரசியல் இருந்து ஒதுங்குவதற்கு உத்தேசித்துள்ளார்.
