” கட்சியை பலப்படுத்தக்கூடிய ஒருவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு நான் தயார். கட்சிக்காக இந்த தியாகத்தை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போதே ருவான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஐ.தே.கவிலுள்ள தமிழ் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
” ஐக்கிய தேசியக் கட்சிக்காக தம்மை அர்ப்பணித்த நவீன், அர்ஜுன ரணதுங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். ருவானுக்கு சார்பான சிலருக்கே பதவி வழங்கப்படுகின்றது.” – என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே ருவான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பலப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், தலைமைத்துவத்தை கைப்பற்றும் எண்ணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.