தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் தயாரிக்கப்பட்ட பிரகடனம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
அத்துடன், இணைந்த வடக்கு, கிழக்கில் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு அவசியம் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.