அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைமீது எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.
அதேவேளை, குறித்த அறிக்கையானது அரசியல் மயப்படுத்தப்பட்டதொன்றாகும் என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இக்குழுவில் உள்ள பரிந்துரைகள் அமுலாவதை தடுப்பதற்கு ஜே.வி.பி. நீதிமன்றத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
