அரசுக்கெதிராக போராடினால் அரச வேலை இல்லை

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு இனிவரும் காலங்களில் அரச வேலை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து கொழும்பு உயர் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி யின் முக்கியஸ்தர் குழு ஒன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியது.

இந்தக் கலந்துரையாடலின் விளைவாகவே அரசாங்கம் கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களிலோ அல்லது குழுக்களிலோ இணைவோருக்கு அரச சேவையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை.

இவ்வாறான போராட்டங்கள் மற்றும் அரச விரோத செயல்களில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு எதிர்காலத்தில் அவர்களை பற்றிய பதிவுகள் பேணப்பட்டு அவர்கள் முன்வரும் போது தகுதியானவர்களாக கருதப்படுவதற்கான அடிப்படை ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles