” தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை .” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
‘விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் அதன் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற துறைசார் நிபுணர்கள் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
