அவசரகால சட்டம் தற்காலிக ஏற்பாடு மாத்திரமே – அரசு விளக்கம்

அவசரகால சட்டத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைத்துக்கொள்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை. அதேபோல கருத்து சுதந்திரம், போராட்டம் நடத்தும் சுதந்திரம் என்பனவும் பாதுகாக்கப்படும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், ஊடக அடக்குமுறையைக் கையாள்வதற்காகவுமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் கருத்துகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றன. கொரோனா தொற்று வேகமாக பரவிய அண்மைய காலப்பகுதியில்கூட ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இவை தடுக்கப்படவில்லை. எந்தவொரு போராட்டம்மீதும் தண்ணீர்தாரை பிரயோகமோ அல்லது தடியடி தாக்குதலோ மேற்கொள்ளப்படவில்லை. போராடும் மற்றும் கருத்து சுதந்திரம் எமது ஆட்சியில் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.

மக்களை சூறையாடும் வர்த்தகவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள நுகர்வோர் அதிகாரச்சபை சட்டம் பலம்மிக்கதாக இல்லை. அச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்றம்வந்து நிறைவேறுவதற்கு காலம் எடுக்கலாம். எனவே, அச்சட்டம் பலமடையும்வரையில்தான் அவசரகால ஏற்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மாறாக அவசரகால சட்டத்தை நீண்டகாலம் வைத்துக்கொள்வது அரசின் எதிர்ப்பார்ப்பு அல்ல.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles