அவதூறு வழக்கில் ஹொலிவுட் நடிகர் ஜோனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015இல் அவரை கரம்பிடித்த ஜோனி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின் 2018இல் ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் டெப்பின் கையை விட்டுச் சென்றன. இதனால் அவதூறாக 15 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு ஆம்பர் மீது அவர் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆம்பர் 10 மில்லியன் டொலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டொலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.