ஆகஸ்ட் 9 ஆம் திகதி சிறிகொத்தவை கைப்பற்றுவோம் – ஹரின் சூளுரை

” தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியையும், கட்சி தலைமையகமான சிறிகொத்தவையும் நாம் நிச்சயம் கைப்பற்றுவோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” உண்மையான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் எம்முடனேயே இருக்கின்றது. கட்சி பெயர் பலகை மட்டுமே ரணில் தரப்பிடம் இருக்கின்றது. ” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles