ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலியில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொது கூட்டத்தில் ஜெய் ஷா தலைவர் பதவியில் நீடிப்பதற்கு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா முன்மொழிய, கவுன்சிலின் இதர உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.
கடந்த 2021 ஜனவரியில் வங்கதேசத்தின் நஸ்முல் ஹசன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷா, தனது பதவிக் காலத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை (2022, 2023) வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.