ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய புதிய வேலைவாய்ப்பு

அனைத்து வகையான பாடசாலைகளிலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட சில முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய, புதிய ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு போட்டிப் பரீட்சைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ஆசிரியர் சேவைக்கு தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்ப படிவங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பெற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles