பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றபோதிலும், பெருந்தோட்டக் கம்பனிகளே இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். இது விடயத்தால் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.
சம்பள உயர்வுக்கு அரசாங்க தரப்பில் இருந்து அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டபோதிலும் கம்பனிகளே இழுத்தடிப்பு செய்து முட்டுக்கட்டையாக இருக்கின்றன. எனினும், இம்மாதத்துக்குள் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி எடுத்துவருகின்றோம். அமைத்து தரப்புகளுடனும் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும்.” – என்றும் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.










