ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், டீன்ஸ் வீதி மூடப்பட்டதையடுத்து, மாணவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Latest Articles