ஆலய நிர்வாக சபைக்கான உறுப்பினர்களை ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்வதற்காக மஸ்கெலியாவில் இன்று (30) தேர்தல் நடைபெற்றுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கான நிர்வாக சபை உறுப்பினர்களே இவ்வாறு வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி இளைஞர்களின் முயற்சியால் நடைபெற்ற இத்தேர்தலில் ஊர் மக்கள் வாக்களித்தனர். பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
கே.சுந்தரலிங்கம், ஹட்டன்