ஆஸ்கர் விருதை வென்றது நாட்டு நாட்டு பாடல்

”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாடு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப் பாடலை எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் எழுதியுள்ளார், மேலும் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.

ஆஸ்கார் விருதுக்குள் நுழைவதற்கு முன், ஜனவரி மாதம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதையும், சிறந்த பாடலுக்கான விமர்சகர்களின் சாய்ஸ் விருதையும் நாட்டு நாடு வென்றது. சில நாட்களுக்கு முன்பு, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நடனப் பாடலுக்கு சிறந்த அசல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

இந்தப் பாடல் இந்தியில் நாச்சோ நாச்சோ என்றும், தமிழில் நாட்டுக் கூத்து என்றும், கன்னடத்தில் ஹல்லி நாடு என்றும், மலையாளத்தில் கரிந்தோல் என்றும் வெளியிடப்பட்டது. அதன் இந்தி பதிப்பை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் விஷால் மிஸ்ரா பாடியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நிகழ்த்திய ஹூக் ஸ்டெப், சமூக ஊடகங்களில் வைரலானது.

தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. உலகளவில் பிரபலமடைந்த இப்பாடல் பல்வேறு நாட்டினரையும் கவர்ந்திழுத்தது. இப்பாடல் ஆஸ்கார் விருதைப் பெறுமா என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது.

மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதைப் பெற வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கிராமி விருதையும் அது வெல்ல வேண்டும். ஏனென்றால் இந்தியர்களாகிய நம்மில் யாருக்கு எந்தவொரு விருது கிடைத்தாலும், அது இந்திய நாட்டை உயர்த்தும். மேலும் நமது கலாச்சாரத்தின் மீதான பார்வையையும் உயர்த்தும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. இதன்மூலம் இந்தியாவில் முதல் முதலாக ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்ற படம் எனற சாதனையை இப்படம் பிடித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles