‘இடைக்கால அரசு’ – ஜனாதிபதியுடன் 11 கட்சிகள் இன்று மந்திராலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

இடைக்கால அரசு மற்றும் புதிய பிரதமர் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளன.

பிரதமர் பதவிக்கு 11 கட்சிகளும், மூவரின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தன. எனினும், ரணிலை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles