தற்போதுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக புதிய அமைச்சரவை, இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலும் சர்வ கட்சி அரசு வேலைத் திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் முப்பதாம் திகதி திருத்தம் செய்யப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சர்வ கட்சி அரசுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தியுள்ளார். அதன்படி சர்வ கட்சி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறெனினும் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுடன் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளிலிருந்த அமைச்சர்கள் சிலரும் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுபடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.










