2015 இல் மண்சரிவால் பாதிக்கப்பட்ட இதல்கஸ்ஹின்ன தோட்டத்திலுள்ள 33 வீடுகளுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் மேற்கொண்டுள்ளார்.
வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நிலத்தையும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.
650 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஒரு வீட்டுக்கு 12 லட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 33 குடும்பங்களுக்கும் 396 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு










