‘இதுவரை 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்களில் 97 வீதமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது மூவர் மாத்திரமே சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

பந்துல குணவர்தன, ஜனக வம்கும்பர, அசங்க நவரத்ன ஆகிய மூவரே தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles