இதொகாவின் துரோகம் தொடர்கிறது!

லயன் அறைகளை கிராமங்களாக மாற்றும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஆதரவளித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எமது மக்களை இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்தள்ளியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“ 200 வருடங்கள் கடந்து மலையக சமூகம் ஏனைய சமூகங்களுகளுக்கு நிகராக சட்டங்களை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் எங்கும் இல்லாதவாறு லயன் அறைகளை குடியிருப்புகளாக கொண்டு அவல வாழ்க்கையை வாழும் ஒரு சமூகம் என்றால் அது மலையக மக்கள்தான்.

அரசாங்கத்தில் இருக்கும் மலையக பிரதிநிதிகளையும் அமைச்சரையும் ஒன்றிணைந்து மலையக மக்களை இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்நோக்கி தள்ளவும் அவர்களை லயன் அறைகளில் முடக்கவும் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை இந்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

பெருந்தோட்டங்களில் புதிய கிராமங்களை உருவாக்குதல் என்ற இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் 1, 2ஆம் பிரிவில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள் மற்றும் வரிசை லயன் அறைகள் ஒன்று சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட்ட எல்லைகள் மற்றும் அம்சங்களுடன் நாட்டில் உள்ள பாரம்பரிய கிராமங்கள் போன்று கிராமங்களாக மாற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, மலையக மக்கள் வாழும் லயன் அறைகளை ஒன்றிணைந்து கிராமங்களாக பெயரிடப்போகிறோம் என மிகத் தெளிவாக குறிப்பிடும் அமைச்சரவை பத்திரத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்திருப்பது வெட்கக்கேடானது.

இந்த தீர்மானத்துக்கு மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்களது பிரதிநிதியாக நாடாளுமன்றம் வந்து அமைச்சரவையில் அமர்ந்துகொண்டு ஆதரவளிப்பது பாரிய துரோகமாகும்.

இ.தொ.காவின் 50ஆண்டு அரசியல் முதிர்ச்சியில் லயன் அறைகளை கிராமங்களாக்க ஆதரவளிக்கிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் குருடர்களாக இருக்க வேண்டும் அல்லது செவிடர்களாக இருக்க வேண்டும் அல்லது அரை லூசு தனத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

மலையக மக்களுக்கு நில உரிமைகளை வழங்க பாதீட்டில் 400 கோடியை ஒதுக்கியுள்ளதாக கூறினார்கள். இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 3, 4 மாதங்கள்தான் உள்ளன. பெருந்தோட்ட பகுதிகளில் எங்காவது ஒரு இடத்தில் நில அளவை செய்து காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என அமைச்சர் இந்த சபையில் வந்து கூற வேண்டும்.” என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles